Thursday, September 30, 2010

இரசனைகள் உண்டு


காதலிக்கத்தெரியாத காதலனுடன்
காதல் மொ‌ழி பேசச்சொல்லி
தர்க்கம்
செய்யும் தா‌ரகையே கேள்
உனதுயிர்க் காதலனுக்கு பலவித
இரசனைகள் உண்டு
ஆனால்
அந்தப்பாவிக்கு தெ‌ரியாது அதைவெளிப்படுத்த
உனதருமை
நண்பனாய் நான் ஒன்று

சொல்லுகிறேன் கேள் பேதையே
பிறப்பினால் ஊமையானால்
இவ்வலி
புதிதல்ல - ஆனால்
வாயிருந்தும் பேச முடியாது தவிக்கும்
அந்த பாவியை
அரவணைத்து
அதன் உணர்வு‌களை எங்கனம்
அறிவாயோ அன்று நீபெறும்
இன்பம்
இவ்வுலகில் எவரும் பெற்றிரார்

1 comment: