காதலிக்கத்தெரியாத காதலனுடன் காதல் மொழி பேசச்சொல்லி தர்க்கம் செய்யும் தாரகையே கேள் உனதுயிர்க் காதலனுக்கு பலவித இரசனைகள் உண்டு ஆனால் அந்தப்பாவிக்கு தெரியாது அதைவெளிப்படுத்த உனதருமை நண்பனாய் நான் ஒன்று
சொல்லுகிறேன் கேள் பேதையே பிறப்பினால் ஊமையானால் இவ்வலி புதிதல்ல - ஆனால் வாயிருந்தும் பேச முடியாது தவிக்கும் அந்த பாவியை அரவணைத்து அதன் உணர்வுகளை எங்கனம் அறிவாயோ அன்று நீபெறும் இன்பம் இவ்வுலகில் எவரும் பெற்றிரார்